ஜார்கண்ட் மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சுபாஷ் முண்டா, கடந்த ஜூலை 25-ஆம் தேதி இரவு 8 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த ஜூலை 25-ஆம் தேதி இரவு 8 மணியளவில், ஜார்கண்டின் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள தலடல்லி அலுவலகத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்களால், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சுபாஷ் முண்டாவை சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பிரபல தலைவர் சுபாஷ் முண்டாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான செயல்பாடுகள், பல உள்ளூர் மாஃபியாக்கள் மற்றும் மக்கள் விரோத அரசியல் கிருமினல்களுக்கு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தி வந்த நிலையில் இந்த கொலை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.